திமுக சார்பில் அண்ணா நினைவுநாள் கடைபிடிப்பு

திமுக சார்பில் அண்ணா நினைவுநாள் கடைபிடிப்பு

 திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்

வாழப்பாடியில் நடக்கும் அண்ணா நினைவு நாள் நிகழ்வில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் வருகிற 3-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வாழப்பாடியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் காலை 9 மணிக்கு அண்ணாவின் உருவப்படத்துக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story