பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில்  அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

மாலை அணிவித்து மரியாதை 

திவிக மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பட்டணம் சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நிர்வாகிகள், பொதுமக்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்விற்கு திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நகர வளர்ச்சி மன்ற தலைவர் முன்னாள் கவுன்சிலர் வி.பாலு, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சென்னை உயர் நீதி மன்றம் வழக்கறிஞர் வி.கைலாஷ், அதிமுக முன்னாள் கவுன்சிலர் வி.சுந்தரம், அதிமுக பூசாரிபாளையம் கவுன்சிலர் அங்கமுத்து, தி.மு.க. முத்துக்காளிப்பட்டி குமார், தி.வி.க நகரச் செயலாளர் பிடல்சேகுவேரா, திமுக,14 வது வார்டு ஆட்டோ பாக்கியராஜ், மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story