அண்ணா நினைவு நாள் : அதிமுகவினர் மரியாதை

அண்ணா நினைவு நாள் : அதிமுகவினர் மரியாதை

அண்ணா நினைவு நாள் 

பெரம்பலூரில் அறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நேற்று காலை 11 மணி அளவில் , பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், அதன் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன். தலைமையில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அறிஞர் அண்ணாவின் சிலை அருகே உள்ள தந்தை பெரியார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story