குமரி சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில் அன்ன பூஜை

குமரி சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில் அன்ன பூஜை
விவேகானந்தர் நினைவு தினத்தில் அன்ன பூஜை
குமரி சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தில் அன்ன பூஜை நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121- சமாதி தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதை யொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் காலை அன்ன பூஜை நடந்தது.

இதையொட்டி காலை 10 மணிக்கு 'நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங் களில் உள்ள பொதுமக்களி டம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.

மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதாதேவி மற்றும் விவேகானந்தர் மீது மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது.

இந்த அன்ன பூஜை நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவி நிவேதிதா குத்துவிளக்கு ஏற்றி அன்ன பூஜையை தொடங்கி வைத்தார். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப் பன் வரவேற்று பேசினார்.

நாகஜோதி ஐக்கிய மந்திரம் பாடினார். சாந்தி அன்னபூர்ணா ஸ்தோத்திரம் பாடினார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

Tags

Next Story