அண்ணா நினைவு நாள் : இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பொது விருந்து

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பொது விருந்து நிகழ்ச்சியை சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் கலந்து கொண்டு இந்த பொது விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொது மக்களுடன் அமர்ந்து பொது விருந்து சாப்பிட்டார்.

மேலும் இந்த பொது விருந்து நிகழ்ச்சியில் மாரியம்மன் திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ் மற்றும் முருகேசன் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story