அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்!

அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்!

சபரி மலைக்கு சென்ற தொழிற்சங்க நிர்வாகி

அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.

அண்ணா தொழிற்சங்க நிர்வாகி வெள்ளைச்சாமி என்பவர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் முதல் சுமார் 60-நாட்களுக்கு மேலாக வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக வரவேண்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து வந்துள்ளார்.

விரதம் இருந்து வந்த அவர் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சைக்கிள் மூலம் பயணம் மேற்கொள்ள இருப்பதை அறிந்து அவர் பயணம் சிறக்கவும், அவருடைய இந்த கடுமையான வேண்டுதல் நிறைவேறவும், சபரிமலை ஐயப்பனின் பூரண ஆசிகள் கழகத் தொண்டர்களுக்கு கிடைக்கவும் கொடியசைத்து சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.

கழக பொது செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு செழிப்பான ஆட்சியை வழங்க அந்த எல்லாம் வல்ல சபரிமலை ஐயப்பன் அருளாசி வழங்குவார் என்று அண்ணா தொழிற்சங்க நிர்வாகி வெள்ளைச்சாமி நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தர்ம.தங்கவேல் மாவட்ட கழக இணைச் செயலாளர் சுவிதா பாண்டியன்,

ஒன்றிய கழக செயலாளர்கள் துரை.தனசேகரன் ராஜேந்திரன்,வேலாயுதம், நரேந்திர ஜோதி அறந்தாங்கி நகர கழக செயலாளர் ஆதி.மோகனகுமார், கீரமங்கலம் பேரூர் கழக செயலாளர் வணங்காமுடி, மாவட்ட கவுன்சிலர் குழ.சண்முகநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். .

Tags

Next Story