அண்ணா தொழிற்சங்கத்தினர் மண் சட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்

அண்ணா தொழிற்சங்கத்தினர் மண் சட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

15-வது சம்பளக்குழு பேச்சு வார்த்தையை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் மண் சட்டி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மண்டல தலைவர் சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 15-வது சம்பளக்குழு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கையில் மண்சட்டி ஏந்தியும், ஒரு சிலர் அரை நிர்வாணத்தோடும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story