அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு - கே.பி முனுசாமி பங்கேற்பு

அண்ணா தொழிற்சங்க அலுவலகம் திறப்பு -  கே.பி முனுசாமி பங்கேற்பு
கேபி முனுசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரியில் அண்ணா தொழிற்சங்க புறநகர் அலுவலகத்தை அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 107ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அண்ணா தொழிற்சங்க புறநகர் அலுவலகத்தை அதிமுக துணை பொது செயலாளர் கேபி முனுசாமி திறந்து வைத்தார். நிகழ்வில், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் முனி வெங்கட்டப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story