சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடுகள்

சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடுகள்

அன்னாபிஷேகம்

சிவன் கோவில்களில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். நேற்று ஐப்பசி பவுர்ணமியையொட்டி, குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில், ராமலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. இதே போல் குமாரபாளையம் மற்ற சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில், ராஜ வீதி சவுண்டம்மன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story