சிவன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு எடப்பாடியில் உள்ள சிவன் மற்றும் காளியம்மன் கோவில்களில் 150 கிலோ சாதத்தால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு 150 கிலோஅலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு அன்னாபிஷேகத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்... அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர், மற்றும் தேவகிரி அம்பாள் சுவாமிகளை வழிபட்டனர் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல தாவாந்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன், கோவிலில் மூலவர் காளியம்மனுக்கு சாதத்தால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் நடைபெற்றதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. எடப்பாடியில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story