கைலாசநாதர் ஆலயத்தில் அக்.28-ல் அன்னாபிஷேகம்

கைலாசநாதர் ஆலயத்தில் அக்.28-ல் அன்னாபிஷேகம்

கைலாசநாதர்

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அக்.28-ல் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியைத் தொடர்ந்து அக்.28-ல் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் பரம்பரை அறக்கட்டளைதாரர்களால் நடத்தப்படும். இதனையடுத்து இந்த ஆண்டு கைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு மாலை 6 மணி அளவில் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவரான ஸ்ரீகைலாசநாதர் சுவாமி அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள், அன்னாபிஷேக நிரந்தரக் கட்டளைதாரர் பெப்சி பி.சுரேஷ்குமார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story