இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

இபிஎஸ் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

அன்னதானம்

ராணிப்பேட்டையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை, சிப்காட், அம்மூர், ஆற்காடு, திமிரி, மேல்விஷாரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கோவில்களில் எடப்பாடி பழனிசாமி பூரண உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பொதுமக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும், நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.

Tags

Next Story