பிரம்மதேசத்தில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

பிரம்மதேசத்தில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

அன்னதானம் வழங்குதல்

திருவண்ணாமலை மாவட்டம்,பிரம்மதேசத்தில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்யாறு அருகே வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் பிரம்மதேசம் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திமுக கழக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட கழக துணை செயலாளர் க.லோகநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத் ஒன்றிய கழக செயலாளர்கள் சங்கர் , தினகரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story