முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்
அன்னதானம் வழங்கிய போது
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூரில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 182 - வது வட்ட கழக செயலாளர் ம.ஆறுமுகம் ஏற்பாட்டில் கந்தன்சாவடி பகுதியில்,இன்று (03/03/2024 ) சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் திமுக இருவண்ண கொடி ஏற்றி பொது மக்களுக்கு பிரியாணி வழங்கினார்.

இந்நிகழ்வில்,சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளரும்,14 வது மண்டல குழு தலைவர் S.V ரவிச்சந்திரன்,பகுதி துணைச் செயலாளர் V.வெங்கடேசன், மாவ‌ட்ட பிரதிநிதி கொட்டிவாக்கம் S.கோவிந்தன், P.செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொது மக்கள் அனைவரும் உடனிருந்தனர்.

Tags

Next Story