கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணாமலை சுற்றுப்பயணம்

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்பி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் "என் மண், என் மக்கள்" என்கிற யாத்திரை மேற்க்கொள்ள உள்ளார்.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அண்ணாமலை தலைமையிலான பாஜக வேகமாக வளர்ந்து வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.. ஆளுங்கட்சியாக இருப்பவர்களும், எதிர்க்கட்சியாக இருப்பவர்களும் அண்ணாமலை யாத்திரையை பார்த்து மலைத்துபோயிருக்கிறார்கள்.
அண்ணாமலைக்கு முன்பு அண்ணாமலைக்கு பிறகு என பாஜக வரலாற்றில் காணாத எழுச்சியாக வளர்ந்து வரும் பாஜகவை யாராலும் தடுக்க முடியவில்லை தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு நேரடியான பெரிய கட்சியாக பாஜக வளர்ந்து நிற்கிறது. அண்ணாமலை யாத்திரைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதாக பேசினார்