அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்டல கைப்பந்து போட்டி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மண்டலங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மண்டலங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கைப்பந்து போட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியின் துவக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் சிவகுமார் அவர்கள் தலைமையேற்றார் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணை இயக்குனர் வெங்கடாஜலபதி அவர்கள் முன்னிலையில் வகித்தார். கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் க. சேட்டு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் பேராசிரியர்களும் தொடக்க விழாவிற்கு வருகை புரிந்தனர் இப்போட்டியில் 5 அணிகள் பங்கு பெற்றனர். நடைபெற்ற இறுதி போட்டியில் சிதம்பரம் உடற் கல்வித்துறை அண்ணாமலை பல்கலைக்கழக அணியினரும் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அணியினரும் மோதினர் இறுதிப் போட்டியில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அணியினர் 45-25 என்று கணக்கில் வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி அவர்களும் வருகை புரிந்து பரிசுகளை வழங்கினார். போட்டியின் ஏற்பாடுகளை கல்லூரியின் உடறக் கல்வி இயக்குனர் ஜோதிபிரியா அவர்கள் செய்திருந்து நன்றி உரையாற்றினார்.

Tags

Next Story