கலைஞர் படிப்பகத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

கலைஞர்  படிப்பகத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா நினைவு நாள் 

கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூரில் உள்ள கலைஞர் நினைவு படிப்பகத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காலத்தூரில் உள்ள கலைஞர் நினைவு படிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அவரது 55 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், தலைமைச செயற்குழு உறுப்பினர் கோவிந்தராசன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன், ஒன்றிய தி.மு.க. பொருளாளர் பாரதிமோகன், கிளை செயலாளர் குணசேகரன் மற்றும் வடக்காலத்தூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story