அரசுப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

அரசுப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

சேலம் எம்.ஜி.ஆர். நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 

சேலம் எம்.ஜி.ஆர். நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சேலம் அருகே உள்ள இரும்பாலை எம்.ஜி.ஆர். நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்வியாளர் சின்னுசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்று பேசினார். ஆசிரியர் ஷாலினி ஆண்டறிக்கை வாசித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கச்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், அங்குசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அளவில் கலைத்திருவிழா ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற 7-ம் வகுப்பு மாணவி சாருலதாவுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பரதம், மாறுவேடம், கிராமிய நடனம், நாடகம், சிலம்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story