அரசுப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இருக்கும் கண்டிப்புதூர் நகராட்சி தொடக்க பள்ளி, ஆவரங்காடு நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ரஹாரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா செந்தில், நகர செயலாளர் அ.குமார், நகர மன்ற தலைவர் மோ. செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியைகள், ஆசிரியர்கள்,என பல்வேறு தரப்பினர் இந்த ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் மாணவ மாணவியர் பங்கேற்ற ,கண் கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story