தமிழ்நாடு வருவாய்த் துறையின் வைர விழா மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாடு வருவாய்த் துறையின் வைர விழா மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாடு வருவாய்த் துறையின் வைர விழா மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு

நிவாரண பணிகளில் ஈடுப்பட்டு வருவதால் வைர விழா மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 60-ஆம் ஆண்டு வைரவிழா மாநில மாநாடு சென்னையில் நடத்திட திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் அனைத்தும் 95% நிறைவடைந்திருந்த நிலையில், தென் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு, தகவல் தொடர்பு மற்றும் தரைவழி போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வெள்ள பாதிப்பு பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் இரவு பகல் பாராமல் நிவாரணப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெருமழையினால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திடும் பணியில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே குறித்த தேதியில் மாநாட்டினை நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் ஒப்புதலுடன் மாநாடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags

Next Story