முத்துமாரியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

முத்துமாரியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

சிவகங்கை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


சிவகங்கை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜோதி முத்து மாரியம்மன் திருக்கோவிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக அம்மன் சன்னதி முன்பு யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து அம்மனின் மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள், ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் மூலவர் ஜோதி முத்துமாரி அம்மனுக்கு திருமஞ்சன பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு புதுப்பட்டு வஸ்திரம் அணிவித்து வண்ணமலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண் பூசாரியான மாரியம்மாள் ஐந்து வகையான முள்ளில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி ஆசீர்வாதம் செய்தார். இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags

Next Story