கண்டியங்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா!!

கண்டியங்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா!!

பள்ளி ஆண்டு விழா

ஜெயங்கொண்டம் அருகே இ.கண்டியங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள இ.கண்டியங்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை விஜயராணி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் நிர்மலா சாமிநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமலிங்கம், இலையூர் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற தலமையாசிரியர் சுவாமி கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மின்வாரிய அலுவலர் கொளஞ்சியப்பா, முருகன் ஆசிரியர் செல்வம், செண்பகம் உட்பட பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் ஆசிரியர் இளஞ்சோதி நன்றி கூறினார்

Tags

Next Story