அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியை மீனாகுமாரி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில் பள்ளி மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக கிராமிய கலை நடனத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் மாணவர்களின் சிலம்பம் மற்றும் இசைக்கருவிகளை இசைத்தனர்.. அதனை தொடர்ந்து பள்ளி சார்பில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.. போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

நெகிழியை தவிர்க்க துணிப்பை பயன்படுத்துவோம் என்றும் நெகிழியை ஒழிப்போம் இயற்கையை காப்போம் என்ற தலைப்பில் மாணவி ஒருவர் பேச்சு போட்டியில் பேசி அசத்தினார்.அவருக்கு பாராட்டு சான்றிதழுடன் பரிசினையும் தலைமை ஆசிரியை மீனா குமாரி வழங்கினார்.

Tags

Next Story