சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா

 திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா நடந்தது.

திருக்கோவிலுார் சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா நடந்தது.
திருக்கோவிலுார், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜை, மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், ஆரத்தி பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு ஆரத்தி பூஜை, 9:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story