மணபாக்கம் அருகே தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

மணபாக்கம் அருகே தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
மணபாக்கம் அருகே தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

திருக்கழுக்குன்றம் அடுத்த மணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பேச்சுப்போட்டி, சிலம்பாட்டம், கிராமிய பாடல், இயற்கையை காக்க வேண்டும் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கவிதைகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழுப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பள்ளியில் கல்வி விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 2003 ம் ஆண்டு சமூக சேவையை சிறப்பாக மேற்கொண்ட அப்பள்ளியின் துணை ஆசிரியை J. ஜெயமணி அவர்களுக்கு முத்தமிழ் சமூகசேவைஅறக்கட்டளை சார்பில் 2023 ம் ஆண்டு நற்பணி நல்லாசிரியர் வழங்கப்பட்டதற்கு மணப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் பாராட்டு விழாவும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், எம். கே ரஞ்சித் குமார் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தலைமை ஆசிரியர், பள்ளி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story