அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

 அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா,இலக்கிய மன்ற விழா,மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா,இலக்கிய மன்ற விழா,மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.திருமருகல் வட்டார ஆத்ம குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றி இலக்கிய மன்ற விழா வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.இதில் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் முகமது சுல்தான்,திட்டச்சேரி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுல்தான் ரித்தாவுதீன், செய்யது ரியாசுதீன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் ரஷீத் மற்றும் ஆசிரியர்கள்,மாணவ-மாணவியர்கள்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்,பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பூங்குழலி வரவேற்றார். முடிவில் முதுகலை தமிழாசிரியர் தங்கராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story