அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

சங்ககிரி அருகே அரசிராமணி செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது . இவ்விழாவில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களுக்கு ஏற்றவாறு பள்ளி மாணவ, மாணவிகள் நடனமாடி அசித்தினர். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.தனராஜ், குஞ்சாம்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சி.சந்திரசேகர், மற்றும் ஆனந்தராஜ், அண்ணாமலை, சேகர்,அரசிராமணி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story