ராமநாதபுரம் மழலையர் பள்ளியில் ஆண்டு விழா

ராமநாதபுரம் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 27 வது ஆண்டுவிழா நடந்தது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
ராமநாதபுரம் கீழக்கரை நாடார் ஜனோபகார சங்கம் P. S. சுப்பிரமணியன் ஜெயலட்சுமி நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 27 வது ஆண்டுவிழா நடந்தது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழா டாக்டர் அரவிந்தராஜ் தலைமயில் நடந்தது. இதில்பேசிய டாக்டர் அரவிந்தராஜ் பேசியபோது குழந்தைகள் நன்றாகபடிக்க வேண்டும் பெற்றோர்கள் குழந்தைகளை படி படி என்று சொல்லகூடாது என்று பேசினார். பள்ளியின் வளர்சிக்கு ரூ50, 000 வழங்கினார். இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் ஊராட்சி மன்ற தலைவர், கீழக்கரை நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் சுரேஸ்கண்ணன் பள்ளியில் நடைபெற்றநிகழ்வுகளை எடுத்துரைத்தார். இவ்விழா ஏற்பாடுகளை பள்ளிக்குழு வட்டகை நாடார் ஜனோபகார சங்கத்தினர்,செய்திருந்தனர்.

Tags

Next Story