சேலம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

சேலம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

சேலம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா 

சேலம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எம்.பழக்காரனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. மேச்சேரி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியை மேகலா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ராமலிங்கம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாமிநாதன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்ககிரி ஒன்றியம் பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான தனராஜ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் சுரேஷ், கிருஷ்ணராஜ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை விஜயகுமாரி நன்றி கூறினார்.

Tags

Next Story