திருவையாறு இசைக்கல்லுாரியில் ஆண்டு விழா

திருவையாறு இசைக்கல்லுாரியில் ஆண்டு விழா

கோப்பு படம் 

திருவையாறு இசைக்கல்லுாரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

திருவையாறு அரசு இசைக்கல்லுாரி ஆண்டுவிழா மற்றும் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்ரீவித்யா தலைமை வகித்தார். பேராசிரியர் கோவிந்தராஜன் ஆண்டறிக்கை படித்தார்.

திருவையாறு கூடுதல் சார்நிலை கருவூலஅலுவலர் சுமதி, உதவி மின் பொறியாளர் (பொ) வீரசேகர் ஆகியோர் பேசினர்.

விளையாட்டு போட்டி மற்றும் கல்லூரியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மிருதங்க பயிற்றுனர் புகழேந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story