திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா!

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா!

ஆண்டு விழா

திருப்பூரில் உள்ள குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா! திருப்பூர் குமரன் கூட்டுறவு மகளிர் கல்லூரியில் 28-வது ஆண்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு கோவை மண்டல வீட்டு வசதி துணை பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். கணிப்பொறி அறிவியல் துறை பேராசிரியை ஹேமலதா வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக சத்யமங்கலம் காமதேனு கல்லூரியை சேர்ந்த அருந்ததி, அரிமா சங்க விஸ்வநாதன், கூட்டுறவு சங்க செயலாளர் முத்துரத்தினம், மேலாளர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் முதல்வர் வசந்தி, நிர்வாக அலுவலர் நிர்மல் ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், 100 சதவீதம் வருகை தந்த மாணவிகள், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் மாணவ பேரவை தலைவி ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story