தனியார் கல்லூரியில் ஆண்டு விழா !

தனியார் கல்லூரியில் ஆண்டு விழா !

ஆண்டு விழா

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு பவ்டா நிறுவன தலைவர் ஜாஸ்லின் தம்பி, தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுதா கிறிஸ்டிஜாய் வரவேற்றார், விழாவில் அண்ணா மலை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வாசு, மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓட்டப்பந்த யம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். இந்த நிகழ்ச்சியில் பவ்டா நிறுவன தலைவர் ஜாஸ்லின் தம்பி, பவ்டா கல்லூரியில் 2024- 2025-ம் கல்வி ஆண்டில் முத லாம் ஆண்டு சேரும் மாணவிகளுக்கு மட்டும் கட்டணமில்லா கல்வி வழங்கப்படும் என அறிவித்தார். விழாவில் முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி, கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், மாணவிகள் ஜெனிபர், புவனேஸ்வரி, வர்ஷா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் சேகர் நன்றி கூறினார்.

Tags

Next Story