தனியார் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி !

தனியார் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி !

தனியார் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி

பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் அமைந்துள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 37-வது ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைவரும், தாளாளருமன டாக்டர் .சி. என். ராஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார், பள்ளியின் முதல்வர் என்.சண்முகசுந்தரி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார், பள்ளியின் செயலாளர். நந்தி சி மோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக கழக கூட்டமைப்பின் மாநில ஆலோசகர் டி.ஜெகதீசன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிபேசினார்.

பெற்றோர்கள் தொலைக்காட்சி சீரியல்கள்,மற்றும் அலைபேசியில் காட்டும் ஆர்வத்தை , தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார் .

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும்,பல்வேறு பாடப் பிரிவுகளில் முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டதோடு,அனைத்து ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள்,பெற்றோர்கள், மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். பள்ளியின் மாணவ, மாணவியர் கலந்து கொண்ட கண் கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மேஜிக் ஷோ நிகழ்ச்சிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாணவ,மாணவியர் தங்களது கலை திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றனர். பள்ளியின் துணை முதல்வர் இ.ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story