காவலர்களுக்கு வருடாந்திர கவாத்து பயிற்சி - டிஎஸ்பி பங்கேற்பு

காவலர்களுக்கு வருடாந்திர கவாத்து பயிற்சி - டிஎஸ்பி பங்கேற்பு

கவாத்து பயிற்சி 

மானாமதுரை சப் டிவிஷன் காவலர்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீஸ் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி திருப்புவனம், பழையனூர், பூவந்தி ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த நான்கு இன்ஸ்பெக்டர்கள், 11 எஸ்ஐக்கள் மற்றும் 155 காவலர்கள் வருடாந்திர கவாத்து பயிற்சி மற்றும் ஆய்வு மானாமதுரையில் உள்ள ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் போலீஸ் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் நடைபெற்றது .இதில் போலீசர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து கவாத்து பயிற்சி மேற்கொண்டனர். போலீஸ் டிஎஸ்பி கண்ணன் போலீசார்களின் கவாத்து பயிற்சியையும், ஆய்வையும் மேற்கொண்டு பயிற்சிக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.

Tags

Next Story