நிதி நிறுவன மோசடி- மேலும் ஒருவரை கைது செய்த பொருளாதார குற்றபிரிவு காவலர்கள்.!

நிதி நிறுவன மோசடி- மேலும் ஒருவரை கைது செய்த பொருளாதார குற்றபிரிவு காவலர்கள்.!
கைது செய்யப்பட்ட நபர்
400 கோடி ரூபாய் மோசடி என தகவல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆலயம் நிதி நிறுவனத்தில் டெபாசிட் தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ 400 கோடி வரை பொதுமக்களிடம் வசூல் செய்து கொண்டு அந்த நிறுவனத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 44 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில் ஏற்கனவே 13 பேர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குனரான காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராணிமுத்து ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story