திருமண விருந்தில் மாேதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருமண விருந்தில் மாேதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

கைது 

சாத்தான்குளம் அருகே திருமண விருந்தில் மாேதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் முத்துவேல்(28). இவர் கடந்த 24ம் தேதி சடையன்கிணறில் நடந்த திருமண விழாவுக்கு சென்றிருந்தார். திருமண விருந்தின்போது இட்டமொழியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சஞ்சய் என்பவர் உணவு பரிமாறினார். அப்போது முத்துவேல் மீது உணவு கொட்டியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமண வீட்டினர் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அன்று மாலை சடையன்கிணறு விலக்கில் முத்துவேல் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் கும்பல் திருமண விருந்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முத்துவேலை அவதூறாக பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் முத்துவேல்படுகாயம் அடைந்தார். சம்பவம் குறித்து முத்துவேல் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் எஸ்.ஐ.சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சடையன்கிணறு காலனியை சேர்ந்த சிவசங்கரமூர்த்தி(22), ஆகாஷ்(23) ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்தனர். சஞ்சய் மற்றும் அவரது நண்பரான ஆசீர் வடக்குதெரு அழகுசூரியா ஆகிய மேலும் இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் அழகு சூரியாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story