திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

திருப்பூரில் மத்திய அரசுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம் 

திருப்பூரில் நவீன மனிதர்கள் அமைப்பு சார்பாக போதும் மோடி பை பை மோடி என்னும் மத்திய அரசு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் நவீன மனிதர்கள் அமைப்பு சார்பாக போதும் மோடி பை பை மோடி என்னும் மத்திய அரசுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழகதில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூரில் எந்தவித அரசியல் அமைப்பும் இல்லாமல் நவீன மனிதர்கள் என்ற அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போதும் மோடி பை பை மோடி என்னும் பதாகை ஏந்தியவாரு மத்திய அரசின் கடந்த 10 ஆண்டுகால செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அதனை கோஷமிட்டு போதும் மோடி பை பை மோடி என முழக்கமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் புஷ்பா ரௌண்டான , அனுப்பர்பாளையம்,15 வேலம்பாளையம் , ஆத்துப்பாளையம் , அங்கேரி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நவீன மனிதர்கள் அமைப்பினர் இந்த நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story