போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை விழிப்புணர்வு

குமாரபாளையத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் அமைந்துள்ள, நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் காலை இறை வணக்க கூட்டத்தின் நடைபெற்ற இந்த நிகழ்வில், கருங்கல்பாளையம் காவல் துறை துணை ஆய்வாளர் பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில், காவல்துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு போதைப் பொருளால் ஏற்படுகின்ற தீமைகளையும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல குறைகளையும், வளருகின்ற தலைமுறையினரைப் போதைப்பொருள் எவ்வாறெல்லாம் சீரழிக்கின்றன என்பதைப் பற்றி விளக்கி அறிவுரைகளை வழங்கினர்.


Tags

Next Story