போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட எஸ்பி 

சிவகங்கையில் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் தொடங்கி வைத்து மாணவர்களுடன் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகளான காந்தி வீதி, மதுரைமுக்கு, அம்பேத்கர் சிலை, சாமியார் பட்டி, ஆகிய பகுதிகளின் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, காவல் அதிகாரிகள் தலைமையில், பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது


Tags

Next Story