போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி நடை பயணம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி நடை பயணம்
விழிப்புணர்வு ஜோதியை துவக்கிய கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம், சமூகநலத்துறை சார்பில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி நடைபயணம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் த்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். மேலும் பள்ளிக் கல்லூரிகளில் போட்டிகள், விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணிகள் மற்றும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

முன்னதாக நாகர்கோவில் முதல் களியாக்கவிளை வரையிலான போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி விழிப்புணர்வு நடைபயணத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்ததோடு, பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர நாரயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story