காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

காவல்துறை

தர்மபுரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை மறுநாள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட காவல் துறை மற்றும் தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் ஆகியவற்றின் சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி நடக்கிறது. 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்கள் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு முன்பாக தர்மபுரி மாவட்ட விளை யாட்டு அரங்கத்திற்கு வந்து தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித் தனியாக ரொக்க பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story