அப்பமசமுத்திரம் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்

அப்பமசமுத்திரம் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்

சாலைமறியல் போராட்டம்

அப்பமசமுத்திரம் கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி: ஆத்தூர் அருகே அப்பம்சமுத்திரத்தில் இருந்து அய்யன்கரடு வரை சுமார் 4 கிலோ தூரம் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்தசாலையை சீரமைக்க கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவொரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காட்டு ராஜா தலைமையில் 75 பேர் நேற்று காலை அப்பமச முத்திரம் செல்லும் சாலையில் கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனே சாலை வசதி செய்து தரவில்லை என்றால் பெரிய அளவில் போராட் டம் நடத்தப்படும் என்று கூறி விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story