நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல் வெளியிட்டுள்ளார்.


நிலங்களை அளவீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல் வெளியிட்டுள்ளார்.

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி நடைமுறையில் இருப்பதாகவும். இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை / வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நிலஅளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டுப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story