இலவச வீட்டு மனை தொடர்பாக கோரிக்கை மனு அளிப்பு

இலவச வீட்டு மனை தொடர்பாக கோரிக்கை மனு அளிப்பு

இலவச வீட்டு மனை

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் இலவச வீட்டு மனை தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் நடைபெற்ற சமாபந்தி நிகழ்வில் திட்டக்குடி வட்டத்தில் உள்ள கோடங்குடி கிராம பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான இலவச வீட்டு மனை தொடர்பாக சமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் சார்பாக தயா. பேரின்பம் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் (VAO) கோடங்குடி கிராமத்தில் சேவையை நாடி வரும் பொது மக்களிடம்/விவசாயிகளிடமும் கையூட்டு (லஞ்சம்) பெற்று வருவதை கண்டித்தும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story