கைத்தறி பூங்கா அமைக்க விண்ணப்பம்

கைத்தறி பூங்கா அமைக்க  விண்ணப்பம்

ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க விரும்பும் தொழில் முனைவோர் வரும் 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம், மற்றும் குடேன் வசதி அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர்கள் மொத்தம் மற்றும் சில்லரை வணிகம் நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தி செய்து பயனடையலாம். இந்த அரிய வாய்ப்பைப் பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் பிப்ரவரி 22 ஆம்- தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story