பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்
தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுசூழலுக்கு உகந்த வகையில் செயல்படும் நிறுவனங்கள் பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணபிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு, அதாவது தனிநபர்கள், அமைப்புகளை சேர்ந்த 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, கால நிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் கற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பபடிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளரை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கடைசி நாளாகும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story