தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 மாவட்ட ஆட்சியர்

காஞ்சியில் தொடக்கக் கல்வி பட்டய தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சியில் தொடக்கக் கல்வி பட்டய தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், களியாம்பூண்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தமிழ்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜூன், ஜூலையில் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைக்க வேண்டும். தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஏப்., 1 - 6க்குள் தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணம் விபரம், ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாய்; மதிப்பெண் சான்றிதழ் முதலாமாண்டு 100; மதிப்பெண் சான்றிதழ் இரண்டாம் ஆண்டு 100; பதிவு மற்றும் சேவை கட்டணம் 15; ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய். இதில், தட்கல் எனப்படும் சிறப்பு அனுமதி திட்டத்தில், 1000 ரூபாய் கட்டணத்துடன் ஏப்., 8 - 10 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story