வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட ஆட்சியர் 

வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க உரிய ஆவணங்களுடன் அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஏரி, குளம் நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாடு, மண்பாண்ட தொழில், வீட்டு பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க உரிய ஆவணங்களுடன் அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் தாசில்தார் மூலம் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story