விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேருவதற்கான மாநில அளவிலான தேர்வுகள் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை www.sdat.tn.gov.in w tntalent.sdat.in என்ற இணையதளத்தில் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்குள்ளும், முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கு வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்குள்ளும், விளையாட்டு விடுதிக்கு வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்குள்ளும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags

Next Story