ஜீவன் ரக்‌ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் வளர்மதி

ஜீவன் ரக்‌ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் வளர்மதி

மாவட்ட ஆட்சியர் வளர்மதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜீவன் ரக்‌ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் சார்பில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் சர்வோட்டம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்‌ஷா பதக்கம் தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரை காப்பாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியான நபர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 28-ந் தேதி மாலை 4 மணிக்குள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story